Description
கல்லணை ஆஞ்சநேயர்! தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம்.ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும்.சங்க காலச் சோழ மன்னர் கரிகால் பெருவளத்தான், காவேரி கொள்ளிடம் நீர் போக்கைச் சரி செய்து நீர் பாசனத்தைச் சீரமைக்க காவேரியின் மீது ஓர் அணை கட்டினார்.இந்த அணை, நவீன தொழில் நுட்பத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது.இதன் கட்டுமானத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள், இதை 'கிராண்ட் அனிக்கட்' என்று பாராட்டினர்.இக்கட்டுமானம் களிமண்ணில் புதைந்த மிகப் பெரிய பாறாங்கற்களால் ஆனது. இதன் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் ஆழம் 15-லிருந்து 18 அடிவரை கொண்டது.இது நதி நீர் வெளியேறும் பகுதியில் பாம்பு போல் வளைந்த நிலையில் கட்டப்பட்டது.தற்போதுள்ள பெரிய கல்லணை 1806-இல் ஆங்கிலேயப் பொறியாளர்களால் நிர்மாணிக்கப்பட்டது.பல வருடங்களாக நடந்த மிகப் பெரிய முயற்சியின் காரணமாக அடித்தளம் அமைத்து, அணையின் பாதைகள் உயர்த்தப்பட்டு சாலை வசதி ஏற்படுத்தித் தந்தனர்.இப்பணி முடிவுறும் தறுவாயில் ஏற்பட்ட சில விநோதமான நிகழ்வுகள்,அங்கிருந்த பொறியாளர்களுக்கும் மற்றும் பெருமளவில் கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் வியப்பைத் தந்தன. ஸ்ரீ ராமஜெயம்! ஜெய் அனுமான்! ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: DrArun.co.in@gmail.com #BestAstrologerinChennai #BlackMagicRemovalSpecialist 17-06-2022_பஞ்சாங்கம்-கிரஹ நிலை @Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer *