

பிரதோஷ நாளில் சிவனை வணங்கினால், அனைத்து தோஷங்களும், புற உலக தோஷங்களும், பிற தோஷங்களும் பிரதோஷ வழிபாட்டின் மூலம் அடியோடு தீரும். *சென்னை, மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்* நந்தி சமேத ஸ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமிக்கு *வசிஷ்டர் அருளிய "தாரித்ரிய தஹன ருண விமோசன ஸ்தோத்திரத்தால்" அர்ச்சனை செய்யப்படுகிறது.* இந்த சக்தி வாய்ந்த "மந்திர பிரயோகத்தால்" கடன் பிரச்னைகள்- * பொருளாதார கடன் * பித்ரு கடன் * தேவ கடன் * ரிஷி கடன் * பிறவி கடன் -ஆகிய கடன்கள் முழுமையாக அகன்று, மன நிம்மதியுடன் வாழலாம். "மந்திர புஷ்பாஞ்சலி சேவை" பக்தர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. செல் 089394 66099 ஒவ்வொரு பிரதோஷ பூஜையிலும், பக்தர்களே பூஜை, வழிபாடு செய்து ஆத்ம திருப்தி அடைகின்றனர். பக்தர்கள் அனைவரும் "பிரதோஷ பூஜை"யில் கலந்து கொண்டு சிவனருள் பெறவும். ****************** *இன்று 04.06.2024 தேய்பிறை வைகாசி மாத பிரதோஷம்* *செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம், ருண விமோசன பிரதோஷம் ஆகும்* *ருணம் என்பது கடனை குறிக்கக் கூடியது* *அன்றைய தினம் சிவனை வணங்கினால் கடன் பிரச்னை தீரும்.* ருண விமோசன பிரதோஷ வேளையில், சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால், தீராத கடன்களும் தீரும். மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே, மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக் கொண்டார் சிவபெருமான். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த இறைவன், திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதியில், அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று சிவ தரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய் தீபங்கள் ஏற்றி வணங்கி வர வேண்டும். *ருணம் என்றால் கடன்* கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். *ரோகம் என்றால் நோய்* கடனும், நோயும்தான் இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர். * அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு, கறந்த பசும் பாலில் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. * தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் மிக நன்று. இறைவன், இயற்கையை விரும்பக் கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக் கொண்டு, பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால், சகல தோஷங்களும், ஏழேழு ஜென்மங்களில் உண்டான தோஷங்களும், ஏன் பிரம்மஹத்தி தோஷமே நீங்கும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. ருத்ர மூர்த்தியும், நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை, பிரதோஷ காலத்தில், முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட்டால், தீராத கடன் கூட தீர்ந்து விடும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும், செவ்வாய் பகவானும் மிகப் பெரும் பங்காற்றுகின்றனர். *கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம்* *திருப்பி அடைப்பதற்கும் நேரம் காலம் ரொம்ப முக்கியம்* *ராகு, கேது போன்ற பாம்பு கிரகங்களுடன், குரு சேர்ந்து நிற்கும்போது, புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது* *ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது* *சந்திரன் பலமற்ற நாளில், கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக் கூடாது* *முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது* *அதற்கு பதிலாக செவ்வாய் கிழமைகளில் கடன் அடைக்கலாம்* சிவனுக்கு மட்டுமல்ல, ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும், ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகைக் காக்கவும், தூணிலிருந்து நர நாராயண ரூபமாய், உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம், இந்த பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ, அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள், செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். *மனிதனுக்கு வரும் ருணத்தை மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் இது* *செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்; பித்ரு தோஷம் நீங்கும்* *கடன் தொல்லை தீரும்* *எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவராக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோவில் சென்று, சித்தாமிர்த தீர்த்தத்தில், பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு, வைத்தியநாதனை வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட ருணமும், ரணமும் (கடனும், நோய்களும்) நீங்கும் என்பது சிவ வாக்கு* *உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்; வருமானம் அதிகரிக்கும்* இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் சிவபுராணம், நீலகண்ட பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும். *சென்னை, மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்* *நந்தி சமேத ஸ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமிக்கு* *வசிஷ்டர் அருளிய "தாரித்ரிய தஹன ருண விமோசன ஸ்தோத்திரத்தால்" அர்ச்சனை செய்ய வாருங்கள்...* செல் 8939466099 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி #டாக்டர் #அருண் #ராகவேந்தர், Priest and Prasanna Astrologer, Specialist in Black magic REMEDIES CELL : 8939466099 VISIT : www.DrArunRaghavendar.com MAIL : DrArunRaghavendar@gmail.com #World_renowned_Astrologer_in_India #Best_Astrologer_in_Chennai #White_Magic_specialist #Black_Magic_Removal_Specialist #purva_jenma_dosha_nivarthi #Homam_and_Pooja #dosha_nivarthi_parikara_poojai * 💐 * #2024_JUNE_05-Panchangam-and-Planetary-position * 💐 * @GurujiDrArunRaghavendarPra9802
We hate spam too.